கண்ணா பின்னா தத்துவங்கள்

1.நூல் எழுதறவங்களை நூலாசிரியர்னு சொல்வாங்க, கதை எழுதறவங்களை கதையாசிரியர்னு
சொல்லுவாங்க,
பேர் எழுதறவங்களை பேராசிரியர்னு சொல்வாங்களா?"

2.யானையை எப்படி ஆட்டோவில் ஏற்றுவது ?
"பேண்டை கழட்டி விட்டு"
எலிபேண்டில் இருந்து பேண்டை எடுத்து விட்டால் அது 'எலி" ஆகி போய்விடும். அப்புறமா ஆட்டோவில் எளிதில் ஏற்றிவிடலாம்.

3.டீ மாஸ்டர் டீ போடுரார்
பரோட்டா மாஸ்டர் பரோட்டா போடுரார்
மேக்ஸ் மாஸ்டர் கணக்கு போடுரார்
ஹெட் மாஸ்டரால மண்டைய போட முடியுமா?

4.புள்ளிமான் உடம்பெல்லாம் புள்ளி இருக்கும்
கண்ணுக்குட்டி உடம்பெல்லாம் கண்ணு இருக்குமா

5.ஒரு சிறந்த பேச்சாளர் எந்த ஸ்டேஜிலும் பேசலாம்
ஆனால் அவரால் ஹோமா ஸ்டேஜில் பேசமுடியாது

6.1 பேப்பர் 2 நிமிஷம் எரிஞ்சா சாம்பல் ஆயிடும்...

1 கட்டை 10 நிமிஷம் எரிஞ்சா சாம்பல் ஆயிடும்....

1 மரம் 2 மணி நேரம் எரிஞ்சா சாம்பல் ஆயிடும்....

ஆனா.....

ஒரு பல்பு எவ்வளவு நேரம் எரிஞ்சாலும் சாம்பல் ஆகாது....

7.காளை மாடு ஏன் புல் தின்னுகிறது ?
ஏனென்றால் அதுவே புல்தான் - Bull

8.நைட்ல கொசு கடிச்சா
குட் நைட் வைக்கலாம்...
ஆனா, பகல்ல கடிச்சா
குட் மார்னிங் வைக்கமுடியுமா..???

9.அண்ணனோட ஃப்ரண்ட
அண்ணன்னு கூப்பிடலாம்..
அக்காவோட ஃப்ரண்ட
அக்கான்னு கூப்பிடலாம்..
ஆனா பொண்டாட்டியோட ஃப்ரண்ட
பொண்டாட்டிண்ணு கூப்பிடமுடியுமா..?!

10.நடந்து போனாக் கால் வலிக்கும். ஆனா கால் வலிச்சா நடக்க முடியுமா?

No comments: