வேம்பு ( வேப்ப மரம் )

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
வேம்பு தமிழர்களின் பண்பாட்டோடும், பழக்க வழக்கங்களோடும், வாழ்வோடும், வழிபாட்டோடும் பின்னிப் பிணைந்து விட்ட ஒன்றாகும். சங்க இலக்கியங்களிலேயே “தெய்வம் சார்ந்த பராரை வேம்பு” என்று வேம்பு சிறப்பிக்கப்படுகிறது.



வேம்பு (Azadirachta indica). வேப்ப மரம் இந்தியா, இலங்கை, பர்மா போன்ற நாடுகளில் வளரும் மிகவும் பயனுள்ள ஒரு மரம். இதன் மருத்துவ பண்புகள் கருதி, ஒரு மூலிகை என்றும் வகைப்படுத்தலாம். வேப்ப மரம் நன்றாக வளர்ந்து நிழல் தர வல்லது. அதன் இலைகள் கிருமிகளை அழிக்கும் அல்லது அணுகவிடா தன்மை கொண்டவை என்று கருதப்படுகின்றது. வேப்பம் பூ இல் இருந்து வேப்பம் பூ வடகம், பச்சடி, ரசம் என்பவை செய்யலாம். வேப்ப எண்ணையும் மருத்துவ ரீதியாக பாவிக்கப்படுகின்றது.



***

சித்தர்கள் மூலமாக நமக்கு தெறிந்த சித்த மருத்துவம்:

*

இப்படிப்பட்ட வேம்பு மருந்தாகித்த தப்பா மரம் என்பதை சித்தர்கள் அறிந்தனர். அவர்கள் சொன்னவற்றை இன்றைய விஞ்ஞானிகளும் ஏற்றுக் கொள்கின்றனர். இன்று வரை 30-க்கும் மேற்பட்ட தாவர இரசாயனங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

*

இலை, பட்டை, விதையிலுள் தைலம் பலவகையான பாக்டீரியாக்களைக் கட்டுப்படுத்தும் திறன் உள்ளது என கண்டறியப்பட்டுள்ளது.Streptomycinie போன்ற மருந்துக்கும் கட்டுப்படாத காசநோய் கிருமிகள் வேப்ப எண்ணெய்க்கு கட்டுப்படுவதாக ஆய்வு அறிக்கைகள் சொல்லுகின்றன.


*


லக்னோவிலுள்ள King George மருத்துவக் கல்லூரியில் செய்த ஆய்வின் மூலம் வேப்பிலை மோசமான தோல் நோய்களையும் கட்டுப்படுத்தும், மேலும் குடல் புழுக்களையும் அகற்றும் ஆற்றல் உள்ளது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.மேகாலாயவில் உள்ள பழங்குடி மக்கள் இதய நோய்க்கும், காச நோய்க்கும் வேப்பம் பழங்களையும், இலைகளையும் பயன்படுத்துகிறார்கள்.

*

வேப்பெண்ணெய்க்கு விந்துவிலுள்ள உயிர் அணுக்களைச் செயல் இழக்கச் செய்யும் ஆற்றல் உள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் கண்டறிந்துள்ளது. வேப்பிலையிலுள்ள குயிர் சிடின் என்னும் சத்து Bacteria-க்களைக் கட்டுப்படுத்தும் தன்மை உள்ளது என்று கண்டறியப்பட்டுள்ளது.வேப்ப எண்ணெய்யை சிதைத்து வடித்துப் பெறும் பைரோனிமின் மூலம் Rocketகான உந்துவிசை மாற்று எரிப்பொருளைப் பெறலாம் என்கின்றனர்.


*


எலிகளுக்கு வேப்பிலை சாற்றைக் கொடுத்து ஆராய்ந்ததில் அது கருத்தரிக்கும் ஆற்றலை 11-வது வாரத்தில் முற்றிலும் இழந்து விட்டதை அறிந்தனர். சாறு கொடுப்பதை நிறுத்தி விட்டால் மீண்டும் கருத்தரிக்கும் ஆற்றல் பெற்று விடுவதையும் கண்டுள்ளனர்.

*

நிலத்தின் அமிலத் தன்மையை நிலப்படுத்தும் தன்மையிலும், காற்றின் வேகத்தைக் கட்டுப்படுத்துவதிலும் வேம்பு தன்னிகரற்றது.வேப்பம் பூவிலிருந்து அடுத்த சத்து 3 வகையான நுண்புழுக்களைக் கட்டுப்படுத்துவதாக சித்திக் ஆலம் என்னும் அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர்.சுற்றுச் சூழலை பாதுகாத்து நிலைப்படுத்தும் ஆற்றல் வேம்பிற்கு உள்ளது. காற்றில் கலந்துள்ள தூசியை வடிகட்டும் திறனும், Anthro cyanine என்னும் நச்சு வாயுக்களை ஈர்த்துக் கொள்ளும் பண்பும் வேம்பிற்கு இருப்பதாக ஆய்வுகள் நிரூபிக்கின்றனர்.

*

வேம்பு வெளியிடும் பிராகிபிடின் என்னும் வேதிப்பொருள் காற்றில் கலந்து மனிதனையும் தாவரங்களையும் தாக்கும் கிருமிகளை இயங்க விடாமல் தடுத்து அழிக்கிறது என்று Dr.சக்சேனா கண்டறிந்துள்ளனர்.வேப்பம் விதைக்கும், எண்ணெய்க்கும் பிண்ணாக்கிற்கும்-123க்கும் மேற்பட்ட பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.வேம்பு Meliazia தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது.


***


வேறுபெயர்கள்:
*

அரிட்டம், துத்தை, நிம்பம், பாரிபத்திரம், பிசுமந்தம், வாதாளி.


மருத்துவப் பண்புகள்:

*

இலை:

*

1. புழு, பூச்சிகளால் நேரிடும் துன்பங்களை ஒழிக்கும்.
*
2. வேப்பங்கொழுந்தும், எள்ளும் சேர்த்து அரைத்துப் பூசிவர ஆறாத நாட்பட்ட புண்கள் ஆறும்.
*
3. வேப்பிலையை கற்ப முறைப்படி சாப்பிட்டு வர எந்த நோயும் அணுகாது.
*
4. வேப்பிலைச் சாறு + பழச்சாறு கலந்து படுக்கபோகும் முன் அருந்த ஆழ்ந்த உறக்கம் உண்டாகும்.


***

பூ:
*
பூவை குடிநீரிட்டு குடிக்க குன்ம நோய் தீரும்.

***


காய் + பழம்:
*
தோல் நோய் தீரும்.

***


விதை:
*

1. மூலம், தோல் நோய், சூதக சன்னி, குடல் கிருமி, நரம்புப் பிரிவு நீங்கும்.
*
2. விதை + கசகசா + தேங்காய் பால் சொறி, சிரங்கு, நமைச்சல், தேமல் தீரும்.

***

நெய்:

*

1. துஷ்ட புண்கள் தீரும்.
*

2. ஆராத இரணங்கள் தீரும்.

***


வேப்பம் பட்டை:

*

1)வேப்பம் பட்டை + திப்பிலி குடிநீர் இடுப்பு வாதம், கீல் வாதம் தீரும்.
*
2)கஷாயம் குட்டம் தீரும்.
*
அதிகமான மருந்துகளைப் பயன்படுத்தினால், மரபியல் குணங்களை நிர்ணயிக்கும் Chromosomes சிதைவுறுவதாக தற்கால ஆராய்ச்சியின் மூலம் தெரிய வந்துள்ளது. வேம்பு Chromosome களை பாதிக்காமல் நோய்க் கிருமிகளை மட்டும் அழிக்கும் ஆற்றல் பெற்றுள்ளது.

***

பிசின்:
*
மேக நோயைப் போக்கும்.

***


குறிப்புகள்:

*

1. பூவைத் தலையில் வைக்க ஈறும் பேணும் தீரும்.
*
2. 100 வயதான வேப்பமரப் பட்டையை நிழலில் உலர்த்திச் சூரணித்து பாலில் சாப்பிட்டு வர நரம்புத் தளர்ச்சி நீங்கும். நோய் அணுகாது.
*
3. பூச்சாறு + நெல்லிக்காய் சாறு கலந்து தர எந்த நோயும் அணுகாது, தோல் பளபளக்கும், இரத்தம் சுத்தமாகும்.
*
4. வேப்பமுத்து, மிளகு, கருஞ்சீரகம் மூன்றையும் அரைத்து எண்ணெய்யில் கலந்து தலைக்குத் தேய்த்து முழுகி வரப் புழுவெட்டு மாறும். முடி செழித்து வளரும்.
*
5. வேப்பம்பட்டைத் + தூள் கரிசாலை + மல்லிச் சாறு 7 முறை பாவனை செய்து 1 மண்டலம் தேனில் உண்ண உடல் கருங்காலி மரம் போல் வலிமை உடையதாகும். விந்து கட்டும்.
*
6. வேப்பம்பூ + வேப்ப எண்ணெய் கலந்து காய்ச்சி காதுக்குச் சொட்டு மருந்தாகப் பயன்படுத்தக் காதில் உள்ள பூச்சிகள் வெளிப்படும். காது வலி, காது சீழ் மாறும்.
*
7. நம் வீடுகளில் வேம்பு வளர்ப்பது ஐதீகமாகக் கருதப்பட்டாலும், அதன் தத்துவம் என்னவென்றால் வேம்பை சுற்றி 10 ஆநவசந நோய் எதிர்ப்பு ஆற்றல் உள்ளதென்றும், காற்றானது தூய்மையுறும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

***


மேலும் சில தகவல்கள்:

*


அறிவியல் அற்புதம் நிறைந்த வேம்பு:

*

பூச்சிக்கொல்லி மருந்து:

*

வேப்ப மரத்தில் இருந்து தயாரிக்கப்படும் பூச்சிக்கொல்லி மருந்துகள் பருத்தி மற்றும் புகை யிலைச் செடிகளை அழிக்கும் பூச்சிகளை அழிக்கிறது. இதனை சோதனை முறையில் இந்தியா, இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவில் பயன்படுத்தி அறிவியல் வல்லுநர்கள் வெற்றிகண்டனர்.வேப்பமரம் சுற்றுப்புறச் சூழ்நிலையை பாதுகாக்கிறது. மண் அரிப்பு தடுக்கப்படுகிறது.

*

அதிகமான வேப்ப மரங்கள் நடுவதால் பூமி குளிர்ச்சி அடைகிறது. எந்த சூழ்நிலை யிலும் வேப்பமர வளர்ச்சி பாதிப்பு அடைவது இல்லை. வேப்பமரம் மிக வேகமாக வளரும் மரமாகும். தொண்ணூறு அடி உயரம் வரை வளரும். பூமியின் பசுமையை காப்பாற்றும் மரம் வேப்ப மரமாகும்.கனடாவில் உள்ள ஒட்டவா பல்கலைக்கழகம் விவசாய ஆய்வில் சிறப்பான இடத்தை வகிக்கிறது. அதில் பணியாற்றும் விஞ்ஞானி டாக்டர் ஜான் ஆர்னசான் வேப்ப மரத்தில் இருந்து தயாரிக்கப்படும் இயற்கையான பூச்சிக் கொல்லி மருந்துகள் தற்போது சந்தையில் இடம் வகிக்கும் வேதியியல் பூச்சிக் கொல்லி மருந்துகளை பின்னுக்கு தள்ளிவிடும் என்கிறார்.


***


வியாபார முக்கியத்துவம்:

*

வேப்பமரத்தில் இருந்து தயாரிக்கப்படும் பூச்சிக்கொல்லி மருந்துகள் தாவரங்களை அழிக்கும் பூச்சிகளை அவை கூட்டு புழு பருவத்தில் இருக்கும் போதே அழித்து விடுகிறது. வேப்பமரத்தில் இருந்து தயாரிக்கப்பட்ட பூச்சிக் கொல்லி மருந்துகளை தெளித்தால் அம்மருந்தின் வாசனை இருக்கும் வரை பூச்சிகள் எந்த செடியினையும் அழிக்காமல் உள்ளது. மேலும் அப்பூச்சிகள் பட்டினியால் சாவதையும் கண்டார் டாக்டர் ஜான் ஆர்னசான்.

*

வேப்ப மரத்தில் இருந்து தயாரிக்கப்படும் பூச்சிக்கொல்லி மருந்துகள் ரசாயன பூச்சிக் கொல்லி மருந்தில் உள்ளடையதில் டால மேட்டை விட அதிக சக்தி வாய்ந்தவை யாகும்இத்தகு கண்டுபிடிப்புகளின் பலனாய் வேப்ப மரத்தின் முக்கியத்துவம் வியாபார முக்கியத்துவம் அடைந்து விட்டது. ரசாயன பூச்சி மருந்துகளை பயன்படுத்துவதால் ஆண்டுக்கு இருபது ஆயிரம் பேர் மரணம் அடைகின்றனர் பத்து லட்சம் பேர் நோயால் பாதிக்கப்படுகின்றனர் என கொலம்பியா பல்கலைக்கழக விஞ்ஞான டாக்டர் மர்ரே இஸ்மான் கூறுகிறார்.


***


ஆண்மைக் குறைவு:

*


ரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகள் அமெரிக்காவில் தற்போது 450 மில்லியன் டாலருக்கு விற்பனை ஆகிறது. வரும் ஆண்டுகளில் ரசாயன பூச்சிக் கொல்லி மருந்துகளின் விற்பனை இரு மடங்கு ஆகிவிடும். இதனால் சுற்றுப்புற சூழ்நிலை பாதிப்பு அடைந்து விடும் என்பதை உணர்ந்த அமெரிக்க மக்கள் இயற்கை உரமான வேப்ப மரத்தில் இருந்து தயாரிக்கப்படும் பூச்சிக் கொல்லிகளைப் பயன்படுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.வேப்பங்கொட்டையை பொடியாக்கி பயன் படுத்தும் ஊர்களில் மக்கள் மத்தியில் இரண்டு சந்தேகங்கள் எழுந்துள்ளன. இதனால் ஆஸ்துமா என்ற ஒவ்வாமை நோய் ஏற்படுகிறது என்றும். ஆண்மைக் குறைவு ஏற்படுகிறது என்றும் மக்கள் கருதுகிறார்கள்.

*

இந்த ஐயப்பாட்டை வேளாண் அறிஞர்கள் களைய வேண்டிய நிலையில் உள்ளனர்.இவ்வளவு பெருமை வாய்ந்த வேப்ப மரத்தின் காப்புரிமையைத் தற்போது அமெரிக்க அரசு இந்தியாவிடம் கோரியுள்ளது. எனவே வேப்ப மரத்தின் அவசியத்தை இந்திய மக்கள் உணர்ந்து வேப்ப மரம் வளர்த்து சுற்றுப்புறச் சூழ்நிலை பாதுகாக்க வேண்டுமாய் நமது வேளாண் விஞ்ஞானிகள் கேட்டுள்ளனர்

ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி திருக்கோயில் Akilandeswari Sholavandan

சோழவந்தான் திருமூலநாத சுவாமி

வரலாறு : நூற்றாண்டுகளுக்கு முன்பு, மக்கள் இறை பக்தியில் நாட்டம் இல்லாது இருந்தபோது, அவர்களை இறை பக்தியில் ஈடுபடுத்திட வேண்டுமென ஈசனும் உமையாளும் முடிவெடுத்தனர். அதன்படி மக்களிடம் இறை உணர்வினை ஏற்படுத்திட யாரை அனுப்புவது என நந்திகேஸ்வரரிடம் கேட்டபோது சுந்தரரை அனுப்பும் படி அவர் கூறினார். அதன் படி சுந்தரர் பூமிக்கு வர ஒரிடத்தில் மாடு மேய்ப்பவன் ஒருவன் இறந்து கிடக்க அவனைக் சுற்றி மாடுகள் அழுது கொண்டிருந்த காட்சியைக் கண்டு மனம் இறங்கி அவனது உடலில் புகுந்து மாற்று உரு பெற்றார். அவனது உருவிலேயே வீட்டிற்கு சென்ற அவர் வந்த காரியம் நிறைவேற்றாது இருந்தார். இ‌தனைக் கண்ட ஈசன் சுந்தரரின் வேலையினை உணர்த்த முனிவர் வேடத்தில் சென்று அவரிடம் யாசகம் கேட்டார்.

சுந்தரர் உணவு ‌கொண்டு வர, அங்கு முனிவர் வேடத்தில் இருந்த ஈசனைக் காணாததைக் கண்டு கலங்கினார். அப்‌போது அங்கே தரையில் கால் தடம் இருந்ததைக் கண்டு அதனைப் பின் த‌ொடர்ந்தார். அத்தடம் நேரே சிதம்பரம் சென்றடைய, அங்கே சிவனே முனிவர் வடிவில் வந்ததை உணர்த்தி இன்று தலம் வீற்றிருக்கும் தென்கரை பகுதியில் திருமூலநாதர் அசரீரி ஒலித்தது.

அதன் பின் இப்பகுதியில் திருமூலநாதர் எனும் பெயரிலேயே சிவாலயம் கட்டப்பட்டு வழிபாடு செய்யப்பட்டு வருகிறது.


திருவிழா : இங்கு மாத பூஜைகளுடன், புத்தாண்டு, வைகாசி விசாகம், ஆடி கார்த்திகை, ஆடி பூரம், ஆவணி மூலம், நவராத்திரி, கந்த சஷ்டி, கார்த்திகை, திருவாதிரை, சிவராத்திரி மாசி மகம், பங்குனி உத்திரம் ஆகிய திருவிழாக்கள் சிறப்பா‌க ‌கொண்டாடப்படுகின்றன.
சிறப்பு : முகப்பில் அதிகார நந்தி நின்ற கோலத்தில் துணைவியாருடன் காட்சி தருகிறார்.
திறக்கும் நேரம் : காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். திருவிழா நாட்களில் அதிகாலையிலேயும் நடை திறக்கப்படுகிறது.
பொது தகவல் : இத்தலத்தில் விநாயகர் கோட்டை விநாயகர் அருள்பாலிக்கிறார். இத்தல இறைவன் சதுர விமானத்தின் கீழ் அருள்பாலிக்கிறார்

பிரார்த்தனை : இத்தலத்தில் உள்ள திருமூலநாதர் அகிலாண்டேஸ்வரி அம்பாளை வணங்கிட, குழந்தைப் பேறு கிட்டும், தீராத நோய்களும், குஷ்ட நோய்களும் தீரும். கல்யாண முருகனை வேண்டி வர திருமணத்தடை நீங்கும், துர்க்கையை அபிஷேகம் செய்து துதித்திட நோய்கள் விலகும், சுரதேவரை அபிஷேகம் செய்து வணங்க தீராத காய்ச்சல் தீரும் என்பதும்,பைரவரை வணங்கி வர கண் திருஷ்டி நீங்கும், ‌கோட்டை விநாயகரை வணங்கிட எண்ணிய காரியங்கள் நிறைவேறும் என்பதும் நம்பிக்கை. நேர்த்திக்கடன் : எண்ணிய காரியங்கள் நிறைவேறினால், திருமூலநாதர் அகிலாண்டேஸ்வரிக்கு அபிஷேகங்கள் செய்து, தொட்டில் கட்டி, வளையல்கள் அணிவிக்கப்படுகிறது. கல்யாண முருகனுக்கு திருக்கல்யாணமும், சுரதேவருக்கு வெந்நீரில் அபிஷேகம் செய்து மிளகு பத்து இட்டு, மிளகு, சீரகத்தை நைவேத்தியமாக படைக்கப்படுகிறது. தல சிறப்பு : சிவ பெருமான், மூலநாதராக வீற்றுள்ள இத்தலத்தில் தனியாக உள்ள அகிலாண்டேஸ்வரி சந்நிதியின் எதிரே சுவர்ண புஷ்பகரிணி எனும் தீர்த்த குளம் உள்ளது. இதன் கரையில் அம்பாள் அகி‌லாண்டேஸ்வரி தவம் புரிந்து சிவன‌ை மணம் புரிந்ததாக வரலாறு கூறகிறது. 
குஷ்ட நோயினால் பாதிக்கப்பட்டிருந்த மன்னன் வீரபாண்டியன் இக்குளத்தில் நீராடி தன் நோயினைத் தீர்த்துக் கொண்டதாகவும், அதன் பின் கோயிலை அவன் சீரமைத்ததாகவும் கூறப்படுகிறது. இக்குளத்தி்ல் நீராடினால் தீராத நோய்கள் தீர்வதாகவும், இந்த நீரினை தொடர்ந்து 48 நாட்கள் விரதமிருந்து ஒரிடத்தில் ஊற்றி வர அவ்விடத்தில் வில்வ மரம் முளைக்கும் எனவும், நி‌னைத்த காரியங்கள் நிறைவேறும் எனவும் இன்று வரையிலும் நம்பப்படுகிறது. சிவன் முதன் முதலாக காட்சி தந்த தலமென்பதால், ஆதி சிதம்பரம் என்ற பெயரினைப் பெற்ற தலம் என தல புராணம் கூறுகிறது. அகத்தியர் பொதிகை மலை சென்ற போது மூலநாதரால் உபதேசம் பெற்ற தலம். இத்தலத்தில் புலி சாபம் பெற்ற கந்தர்வன், சாப விமோசனம் பெற்றான்.காசிக்கு சென்றால் முக்தி என்பது போல இத்தலத்திற்கு சென்றாலும் முக்தி அடையலாம் என்பது நம்பிக்கை. இக்கோயிலில் மூலவராக சிவன், ஜலதாரையின் மேல் பிரம்மா, கன்னி மூலையில் விஷ்ணு என மும்மூர்த்திகளும் ஒருங்கே அமையப்பெற்றுள்ளனர். ஜனகாதி முனிவர்கள் முக்தி பெற்ற தலங்களில் இதுவும் ஒன்று. 


முகவரி : ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத திருமூலநாத சுவாமி திருக்கோயில், சோழவந்தான் - மதுரை மாவட்டம்.

உலகின் முதல் இருபது இணைய தளங்கள்

உலகிலேயே அதிகமான எண்ணிக்கையில் பயனாளர்களைக் கொண்டுள்ள இணைய தளம் எது? கண்களை மூடிக் கொண்டு கூகுள் (தேடுதளம்) என்று சொல்லி விடுவீர்கள், இல்லையா? அதுதான் இல்லை. அண்மையில் எடுத்த கணக்கின்படி கூகுள் இணைய தளம் இரண்டாவது இடத்தில் உள்ளது. அப்படியானால் முதல் இடத்தில்? அதுவும் ஓர் அமெரிக்க தளம் தான். இங்கே இந்த வகையில் அதிக தனிநபர் சந்தாதாரர்களைக் கொண்டுள்ள முதல் இருபது இணைய தளங்களை, அதன் வகையுடனும், தன்மையுடனும் காணலாம். இறுதியில் மேலே உள்ள கேள்விக்கான இணைய தளத்தையும் காணலாம்.


20.Amazon.com:

எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள், உடைகள், விளையாட்டு சாதனங்கள், ஏன் உணவு கூட இங்கு விற்பனை செய்யப் படுகிறது. இதன் தனி நபர் வாடிக்கையாளர் எண்ணிக்கை 16 கோடியே 30 லட்சம். முதன் முதலில் இது தொடங்கிய போது, பொருட்களைப் பெற்று, பேக் செய்து அனுப்பும் பணியைத்தான் மேற்கொண்டதாக இருந்தது. தற்போது இதன் இமாலய வளர்ச்சி, இணைய வர்த்தகத்தின் சிறப்பினைக் காட்டுவதாக அமைந்துள்ளது.

19. Sina.com.cn:

மீடியா மற்றும் பயனாளர்கள் உருவாக்கும் தகவல்களைத் தாங்கித் தரும் சீனநாட்டு இணைய தளம். 2000 ஆம் ஆண்டு வாக்கில், சீனாவின் யாஹு தளம் என்ற பெயரை இது பெற்றிருந்தது. 2009ல் Weibo என்ற பெயரில் வலைமனை தளம் ஒன்றையும் இது தொடங்கியது. இந்த தளத்தில் 40 கோடி பயனாளர்கள் உள்ளனர். சினா டாட் காம் தள சந்தாதாரர் எண்ணிக்கை 16 கோடியே 90 லட்சம்.

18. WordPress.com:

17 கோடியே 9 லட்சம் பேர் பயன்படுத்தும் வலைமனைத்தளம். மிக எளிமையான வலைமனை சாதனங்களை இலவசமாக வழங்கி, தன்
வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையை இந்த தளம் பெருக்கிக் கொண்டது.

17. Apple.com:

ஆப்பிள் சாதனங்கள் மற்றும் அவற்றிற்கான சாப்ட்வேர் புரோகிராம்களுக்கான தனி தளம். இவற்றைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் தங்கள் சந்தேகங்களைப் போக்குவதற்கான தகவல்களைத் தரும் தளமும் கூட. வாடிக்கையாளர் எண்ணிக்கை 17 கோடியே 17 லட்சம்.

16. Sohu.com :

சீன நாட்டில் இயங்கும் பல்நோக்கு இணைய தளம் மற்றும் தேடல் தளம். 1997 ஆம் ஆண்டில், சீனாவின் முதல் ஆன்லைன் சர்ச் இஞ்சின் தளமாக இது தொடங்கப்பட்டது. தொடர்ந்து ஒரு பல்நோக்கு இணைய தளமாகவும், ரியல் எஸ்டேட் இணைய தளமாகவும் வளர்ந்து, இன்று 17 கோடியே 58 லட்சம் வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது.

15. Bing.com:

மைக்ரோசாப்ட் தன்னுடைய இந்த தளம் குறித்து மிக தீவிரமாக விளம்பரம் செய்தது. மிக எளிதாக தேடலையும் முடிவுகளையும் தரக்கூடிய தளமாக இதனை காட்டி முன்னுக்குக் கொண்டு வர முயன்றது. அதற்கேற்ற வகையில் நவீன தொழில் நுட்பத்தினையும் இணைத்தது. இதன் வாடிக்கையாளர் எண்ணிக்கை 18 கோடியே 40 லட்சம்.

14. Twitter.com:

ரியல் டைம் தொலை தொடர்பினைத் தரும் இணைய தளம். 2009 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட நாள் முதல், உலகெங்கும் நடக்கும் நிகழ்வுகளை அறிந்து கொள்ள மக்கள் அணுகும் ஓர் இணைய தளமாக உருவெடுத்துள்ளது. அதற்கேற்ற வகையில், பல நிறுவனங்கள், அரசியல் வாதிகள், மக்கள் தலைவர்கள், ஊடக நிறுவனங்கள், தொழில் முனைவர்கள் ஆகியோர் இதில் தகவல்களைத் தருகின்றனர். இதன் சந்தாதாரர் எண்ணிக்கை 18 கோடியே 98 லட்சம்.

13.Taobao.com:

20 கோடியே 70 லட்சம் சந்தாதாரர்களைக் கொண்டது. eBay, Amazon போல மிகப் பெரிய வர்த்தக இணைய தளம். இதன் உரிமையாளரான Alibaba.com, இதனை எந்தக் கட்டணமும் இல்லாத தளமாகக் கொண்டு வந்த நாள் முதல், இது தொடர்ந்து பெரிய அளவில் வர்த்தகம் மேற்கொள்ளும் தளமாக உள்ளது.

12. Ask.com:

21 கோடியே 84 லட்சம் பேர் இதன் வாடிக்கையாளர்கள். கூகுள் இதன் பின்னணியில் உள்ளது. இது முதலில் தொடங்கும்போது Askjeeves.com என இருந்தது. பின்னர் மாற்றங்களை அடைந்தது.

11. Blogger.com:

மிகச் சிறிய நிறுவனமாகத் தொடங்கப்பட்ட, இந்நிறுவனம், இணைய தளங்கள் சரிவைச் சந்தித்த போது, தள்ளாடியது. பின்னர், 2002ல், கூகுள் இதனை மேற்கொண்டு தற்போது உயரக் கொண்டு வந்துள்ளது. வலைமனை அமைப்பாளர்கள் அதிகம் நாடும் தளம் இதுதான். 22 கோடியே 99 லட்சம் பேர் இதன் வாடிக்கையாளர்கள்.

10. MSN.com:

மைக்ரோசாப்ட் நிறுவனம் கொண்டுள்ள இணைய வசதிகளில் இதுவும் ஒன்று. இணைய சேவை நிறுவனமாகத் தொடங்கப்பட்டு, ஹாட்மெயில், எம்.எஸ். என். மெசஞ்சர் ஆகியவற்றைக் கொண் டுள்ளது. போர்டல் தளமாக இயங்குகிறது. இதன் வாடிக்கையாளர் எண்ணிக்கை 25 கோடியே 41 லட்சம்.

9. Baidu.com:

வெப்சைட், ஆடியோ பைல்கள், இமேஜஸ் ஆகியவற்றைத் தேடிப் பெற சீனா கொண்டுள்ள இணைய தளம் இது. ஆயிரக்கணக்கான சீனப் பொறியாளர்கள், தொடர்ந்து இதன் தகவல்களை அப்டேட் செய்து வருகின்றனர். இதன் வாடிக்கையாளர் எண்ணிக்கை 26 கோடியே 87 லட்சம்.

8. Micorosoft.com:


கம்ப்யூட்டர் பயன்படுத்தும் அனைவரும் அறிந்த தளம். இதன் வாடிக்கையாளர் எண்ணிக்கை 27 கோடியே 17 லட்சம்.

7. QQ,com:

சீனாவில் இயங்கும் தேடல் இணைய தளம் மற்றும் தகவல் களஞ்சிய தளம். இதனை உருவாக்கியது Tancent என்ற சீன நிறுவனம். இன்ஸ்டன்ட் மெசேஜ் சேவையில் இது சீனாவில் முதல் நிலைத் தளமாக உள்ளது. இந்த வகையில் 70 கோடி பேர் தனது வாடிக்கையாளர் என இத்தளம் குறிப்பிட்டுள்ளது. Qzone and the Tencent Weibo blog என இதனுடையை இரண்டு தளங்களும் சீனாவில் புகழ் பெற்றவை. இந்த தளத்தின் வாடிக்கையாளர்கள் 28 கோடியே 41 லட்சம் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

6. Live.com:

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் புதிய இமெயில் தளம். அவுட்லுக் மற்றும் ஹாட் மெயில் தளங்களை ஒருங்கிணைத்து அமைக்கப்பட்டது. இதன் வாடிக்கையாளர் களின் எண்ணிக்கை 38 கோடியே 95 லட்சம்.

5. Wikipedia.org:
46 கோடியே 96 லட்சம் வாடிக்கையாளர்களைக் கொண்டது. இலவசக் கலைக் களஞ்சியமாக இயங்கி வருகிறது. யார் வேண்டுமானாலும், இதில் தகவல்களை ஏற்றலாம். இருப்பவற்றை எடிட் செய்திடலாம். இந்த தளத்திற்கு அதிகம் வருபவர்கள், கூகுள் தளத்தைத் தேடுபவர்களாகவே உள்ளனர்.

4. Yahoo.com:

இணைய பல்நோக்கு தளங்களில் முன்னோடியானது இந்த தளம். தேடல் சாதனமாகவும் இணைய போர்டல் தளமாகவும் செயல்படுகிறது. இதன் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 46 கோடியே 99 லட்சம்.

3. Youtube.com:

பயனாளர்கள் உருவாக்கிய வீடியோ காட்சிகளைப் பகிர்ந்து கொள்ள, பார்த்து ரசிக்க இது ஓர் அருமையான தளமாகப் பல்லாண்டுகள் இயங்கி வருகிறது. 2006ல் இதனை கூகுள் நிறுவனம் தனதாக்கிக் கொண்டு, தொடர்ந்து பல வசதிகளை அளித்து வருகிறது. இதன் தனி நபர் சந்தாதாரர்கள் எண்ணிக்கை 72 கோடியே 19 லட்சம்.

2. Google.com:

78 கோடியே 28 லட்சம் பேரைத் தன் வாடிக்கையாளர்களாகக் கொண்ட இந்த தேடுதல் தளம், இவ்வகையில் இன்று உலகின் முதல் இடம் பெற்ற தளமாக உள்ளது. ஜிமெயில், ஜிமேப்ஸ், கூகுள் ப்ளஸ், கூகுள் மெயில் என இணையத்தில் இயங்கும் அனைவரையும் ஏதாவது ஒரு வகையில் இழுத்துப் போட்டு வைத்துக் கொள்கிறது.

1. Facebook.com:

இந்தக் கட்டுரையின் தொடக்கத்தில் கேட்ட கேள்விக்கான பதில் இங்கே உள்ளது. பேஸ்புக் தளம் தான், உலகிலேயே மிக அதிகமான எண்ணிக்கையில் தனிநபர் வாடிக்கையாளர்களைக் கொண்டதாக இயங்கி வருகிறது. இந்த சமூக இணைய தளத்தின் மூலம், உங்கள் நண்பர்கள் அனைவரையும் உடனுடக்குடன் தொடர்பு கொண்டு தகவல்களைப் பரிமாறிக் கொள்ளலாம். முதன் முதலில் ஹார்வேர்ட் பல்கலைக் கழக மாணவர்களுக்கு மட்டும் எனத் தொடங்கப்பட்ட இந்த சமூக தளம் இன்று உலகின் அனைத்து நாடுகளிலிருந்தும் நண்பர்களைக் கொண்ட தளமாக இயங்குகிறது.

All in ONE


விடுகதை

குடிக்க உதவாது, குளத்தில் தங்காது,
கைகளால் தொடாத நீர், கண்களுக்கு
மட்டுமே விருந்தாகும்-
அது என்ன?

குதிரை ஓட ஓட அதன் வால் குறைந்து
கொண்டே போகும் அது என்ன?

கருப்பாய் இருந்தாலும் சுவையாய்
இருப்பேன்- நான் யார்?

=============================
விடைகள்:

கானல் நீர்
ஊசி நூல்
நாவல் பழம்




விடுகதை

1. ஓயாமல் இரையும் இயந்திரமல்ல,  உருண்டோடி வரும்
பந்தும் அல்ல அது என்ன?
2. சிறு தூசி விழுந்ததும் குளமே கலங்கியது அது என்ன?
3. மரத்துக்கு மரம் தாவுவான் குரங்கல்ல, பட்டை
போட்டிருப்பான் சாமி அல்ல, அவன் யார்?
4. அடிக்காத பிள்ளை அலறித் துடிக்கும், அது என்ன?
5. அக்கா விதைத்த முத்து, அள்ள முடியாத முத்து,
அது என்ன?
6. வீட்டிலிருப்பான் காவலாளி, வெளியில் சுற்றுவான்
அவன் கூட்டாளி, அவர்கள் யார்?
7. எத்தனை தரம் சுற்றினாலும் தலை சுற்றாது,
அது என்ன?
8. உயிரில்லாதவனுக்கு உடம்பெல்லாம் நரம்பு,
அது என்ன?
9. உருவத்தில் சிறியவன் உழைப்பில் பெரியவன்,
அவன் யார்?
10. மழை காலத்தில்  பிடிப்பான், அவன் யார்?
——————————————————————-
விடை:
10. காளான்
09. எறும்பு
08. பாய்
07. மின்விசிறி
06. பூட்டும் திறப்பும்
05. கோலம்
04. சங்கு
03. அணில்
02. கண்
01. கடல்


விடுகதை

1. காலில் தண்ணீர் குடிப்பான், தலையில் முட்டையிடுவான்
அவன் யார்?
2. எட்டாத ராணி இரவில் வருவாள். பகலில் மறைவாள்
அவள் யார்?
3. நடந்தவன் நின்றான். கத்தியை எடுத்து தலை
யைச் சீவினேன்.
மறுபடி நடந்தான். அவன் யார்?
4. வால் நீண்ட குருவிக்கு வாயுண்டு. வயிறில்லை. அது என்ன?
5. அம்மா போடும் வட்டம்,பளபளக்கும் வட்டம்,சுவையைக்
கூட்டும் வட்டம். சுட்டுத் தின்ன இஸ்டம். அது என்ன?
6. வெள்ளை ஆளுக்கு கறுப்புத் தலைப்பாகை. அது என்ன?
7. ஓடையில் ஓடாத நீர், ஒருவரும் குடிக்காத நீர். அது என்ன?
8. சலசலவென சத்தம் போடுவான், சமயத்தில் தாகம் தீர்ப்பான்.
அவன் யார்?
9. தொடாமல் அழுவான், தொட்டால் பேசுவான்.
அவன் யார்?
10. வீட்டுக்கு வந்த விருந்தாளியை வரவேற்க ஆளில்லை.
அது என்ன?
————————————————————————–
விடைகள்:
1. தென்னைமரம்
2. நிலா
3. பென்சில்
4. அகப்பை
5. அப்பளம்
6. தீக்குச்சி
7. கண்ணீர்
8. அருவி
9. தொலைபேசி
10. செருப்பு

ஆடு…புலி…புல்லுக்கட்டு…

ஒரு ஆடு ,புலி,புல்லுக்கட்டு மூன்றும் ஆற்றின் ஒருகரையில்
இருக்க மூன்றையும் ஆற்றைக் கடந்து ஒருவன் எடுத்து
வர வேண்டும்.
அதுவும் ஒவ்வொன்றாகத்தான் எடுத்து வரனும்.
புலியை முதலில் எடுத்துச் சென்றால் ஆடு புல்லைத்
ன்றுவிடும்.
புல்லுக் கட்டை முதலில் எடுத்துப் போனால் புலி
ஆட்டைக் கொன்று விடும்.
இப்படி நடக்காமல் மூன்றையும் பத்திரமாய்க் கரை
சேர்க்கனும்னா
எப்படிக் கொண்டு போவது?
______________________________________________
விடை
1.முதல்ல ஆட்டைக் கூட்டிட்டுப் போய் அக்கரைல
விட்டுட்டு வரணும்.
2. செகண்ட் ட்ரிப்ல புல்லுக் கட்டு அந்தப் பக்கம்
போகணும்.
3. திரும்பி வரப்போ ஆட்டை இந்தப் பக்கம்
கொண்டு வரணும்.
4. மூணாவது ட்ரிப்ல புலியை  அந்தப் பக்கம்
கொண்டு போகணும்.
5. நாலாவது ட்ரிப்லே ஆட்டை அந்தப் பக்கம்
கொண்டு போக வேண்டியதுதான்!

அறிவுப் புதிர்கள் 41-50

விடுகதைகள்
1. அள்ளும் போது சலசலக்கும் கிள்ளும் போது கண்
கலங்கும் அது என்ன?
2. வாயைப் பிளந்து வீதியோரங்களில் நிற்பான் அவன் யார்?
3. முக்கண்ணன் சந்தைக்குப் போகின்றான் அவன் யார்?
4. மீன் பிடிக்கத் தெரியாதாம் ஆனால் வலை பின்னுவானாம்
அவன் யார்?
5. தொடலாம் ஆனால் பிடிக்க முடியாது அது என்ன?
6. உணவை எடுப்பான் ஆனால் உண்ணமாட்டான் அவன் யார்?
7. வெள்ளம் வெள்ளமாக கறுப்பன் கண்ணீர் விட்டானாம்
அவன் யார்?
8. ஒற்றை கிண்ணத்துக்குள் இரட்டைத் தைலங்கள் அவை எவை?
9.நித்தம் கொட்டும், ஆனால் சப்தம் இல்லை, இது என்ன?
10. நித்திரையின் தூதுவன் இவன், நினையாமல் வந்து விடுவான்
-இவன் யார்?
விடைகள்:
10. கொட்டாவி
9.கண் இமை
8. முட்டை
7. மழை மேகம்
6. அகப்பை
5. தண்ணீர்
4. சிலந்தி
3.தேங்காய்
2. தபாற் பெட்டி
1.வெங்காயம்

விடுகதை

(1) அணில் ஏறாத கொம்பு
அது என்ன கொம்பு ?
(2) தாடிக்காரன் மீசைக்காரன்
கோயிலுக்குப் போனால்
வெள்ளைக்காரன்-அது என்ன?
(3) தொப்பையனுக்கு ஒரு வாசல்
தோழனுக்கு இரண்டு வாசல்-அது என்ன?
(4) சுட்ட குருவி
ஊர்மேலே போகுது
அது என்ன?
(5) கருப்பு சட்டைக்காரன்
காவலுக்கு கெட்டிக்காரன்
அவன் யார்?
******************************************
விடை; 1) மாட்டுக் கொம்பு
2) தேங்காய்
3) சட்டை
4)பலகாரம்
5) பூட்டு

எதிர் நீச்சல்-

(1) ஆயிரம் பேர் பார்க்க
ஆத்தங்கரை ஓரத்திலே
கட்டிப் பிடிக்கிறான்
கள்ளப்பயல்
கன்னத்தைக் கடிக்கிறாள்
கள்ளியவள்-அது என்ன?
2)  உழவன் விதைக்காத விதை
கொத்தன் கட்டாத கட்டிடம்
வண்ணான் வெளுக்காத வெள்ளை
சிற்பி செதுக்காத சிலை- அது என்ன?
(3) கவி பாடும் கட்டழகி
காடு சுற்றும் கருப்பழகி- அது என்ன ?
(4) உழைப்பால் மலரும் பூ
உடனடி உலரும் பூ- அது என்ன ?
விடை (1) திரைப்படம் (2) பல்  (3) குயில் (4) வியர்வை
நூல்; வேடிக்கையான விடுகதைகள்
தொகுப்பு; ஜெகதா

வேடிக்கையான விடுகதைகள்

(1) ஆயிரம் பேர் பார்க்க
ஆத்தங்கரை ஓரத்திலே
கட்டிப் பிடிக்கிறான்
கள்ளப்பயல்
கன்னத்தைக் கடிக்கிறாள்
கள்ளியவள்-அது என்ன?
2)  உழவன் விதைக்காத விதை
கொத்தன் கட்டாத கட்டிடம்
வண்ணான் வெளுக்காத வெள்ளை
சிற்பி செதுக்காத சிலை- அது என்ன?
(3) கவி பாடும் கட்டழகி
காடு சுற்றும் கருப்பழகி- அது என்ன ?
(4) உழைப்பால் மலமும் பூ
உடனடி மலரும் பூ- அது என்ன ?
**************************************
விடை (1) திரைப்படம் (2) பல்  (3) குயில் (4) வியர்வை
நூல்; வேடிக்கையான விடுகதைகள்

விடுகதை

விடுகதைக்கு விடை சொல்லுங்க‌‌ள் 
விடுகதைகள் படித்து ரொம்ப நாட்கள் கிவிட்டதா? இதோ ந்துவிட்டது
உங்களுக்கான விடுகதைகள். படித்துவிட்டு விடைகளைத் தெரிந்து
கொள்ளு‌‌ங்கள்.

1. சின்னத் தம்பிக்கு தொப்பியே வினை? அது என்ன?

2. தலை மட்டும் கொண் சிறகில்லாத பறவை தேசமெல்லாம் சுத்தும்?

3. உலகமெங்கும் படுக்கை விரித்தும் உறங்காமல் அலைகிறான். அவன் யார்?

4. காற்று வீசும் அழகான மரம் அது என்ன?

5. கட்டிய சேலையை அவிழ்க்க நினைத்தால் கண்ணீரும் கம்பலையும்தான்.

6. எப்போதும் காதருகில் ரகசியம் பேசிக் கொண்டிருப்பவள்?
நீங்கள் யோசித்திருந்த விடைகள் ரிதானா ன்பதை சோதித்துக் கொள்ளு‌‌ங்கள்.

1. தீக்குச்சி

2. தபால் தலை

3. கடல் அலை

4. சாமரம்

5. வெங்காயம்

6. செல்பேசி

போட்டி

1)

1
11
21
1211
111221
312211
13112221
?

அடுத்த எண் என்னவாக இருக்கும் ? (இதற்குப் பாரதியால் கூட பதில் சொல்ல முடியாது. [பாரதியை வரவழைக்க இதுவும் ஒரு வழி])

2)
ஒரு தவளை 10 அடி ஆழமுள்ள கிணற்றினுள் விழுந்து விட்டது. ஒரு நாளில் அதனால் 3 அடிகள் உயரே தாவ முடிந்தால் 2 அடிகள் சறுக்கிவிடுகின்றது.
அப்படியெனில் எத்தனையாவது நாளில் அத்தவளை கிணற்றை விட்டு வெளியேறும்?

3)   சிகரெட் புகை பிடித்தலுக்கு அடிமையானவன். ஒரு நாள் புகைபிடிப்பதற்குக் கையில் காசு ஏதுமில்லை. எனவே மற்றவர் புகைபிடித்துவிட்டுத் தூக்கி எறிந்துள்ள சிகரெட் துண்டுகளைச் சேகரிக்கின்றான். 6 சிகரெட் துண்டுகளைக் கொண்டு 1 சிகரெட் தயாரிக்க முடியும் எனக் கண்டு கொள்கிறான்.

ஒரு நாள் அவனுக்கு 36 சிகரெட் துண்டுகள் கிடைக்கின்றன. அப்படியெனில் அவன் அன்று எத்தனை சிகரெட் புகைத்திருப்பான்?





பதில்:- emot-dance.gif


1
11
21
1211
111221
312211
13112221

1113213211

31131211131221

1

ஒரு ஒன்று => 1 1
இரண்டு ஒன்று => 2 1

ஒரு இரண்டு , ஒரு ஒன்று => 1 2 , 1 1

ஒரு ஒன்று, ஒரு இரண்டு, இரண்டு ஒன்று => 1 1, 1 2, 2 1

மூன்று ஒன்று, இரு இரண்டு, ஒரு ஒன்று => 3 1, 2 2 , 1 1



Posted Image
இதனைப் பாருங்கள், இப்படித்தான் நான் கணக்கிட்டேன். 8வது நாளில் கிணற்றின் விளிம்பிற்கு வந்துவிடாது அத்தவளை?




3) 7 என்பது சரியான விடையாகும்.

கதைகள்

சிறு கதைகள்

 

தொடர் கதைகள்

 

சிறுவர் கதைகள்

கோலங்கள்

கம்ப்யூட்டரில் வரைந்த கோலங்கள்




13 புள்ளி 1 முடிய நேர் புள்ளி (நேர்புள்ளி என்பது புள்ளிகளை இரண்டு பக்கங்களிலும் ஒவ்வொரு புள்ளியாக குறைத்துக் கொண்டே வர வேண்டும்.)





17ல் இருந்து 9 வரை ஊடுபுள்ளி




17ல் இருந்து 1 வரை நேர்புள்ளி




கவிதை

நீலவானில் காணும் வாழ்க்கை !

தோழமை

கண்ணீரின் பயணம்.


உயிரென்ன இலவசப் பொருளா?

அம்மா

பாசம்


இறுதி முயற்சியாய்...


௨௦௧௨

ஏன்...?


மனதை சுருக்கிக்கொள்கிறேன் நானாய்....


ஆத்ம திருப்தி.


எப்படி திரும்பிப்போவேன்


காதலாகி கசிந்து


காதலாகி கசிந்து


 சண்டை மகத்துவம்


செல்லம்


வெக்கை

என்ன? என்ன? ஏன்?

காகிதத்தாள்..!

அழும்வரை சிரிப்பேன்

அம்மாவின் சேலை

நன்றி

காதல்

நட்பு

நிலையாமை

தாய்மை

காதலின் தாகம்

ஒரு மொழி கவிதையாகிறது

நான் பெற்றப்பிள்ளை நாதியற்று போச்சி!

ஒரு சொல் சொல்லாயோ..

அன்பு

காதல் கவி நீ...!

மடிமை போக்கு !

தலைப்பற்ற கவிதை

நேற்று வந்தவன்

முற்றம்

நான் பைத்தியம் ஆன கதை

நான் தொலைத்த பூமி !

ஏன்?

பார்வை

தமிழ் ஒளி

சுமைகள்..

விசித்திரமானவளே

ஏன் படைத்தான் எம்மை?

கண் படைத்தா னேன் அழுவதற்கா
கால் படைத்தா னதைத் தொழுவதற்கா
மண் படைத்தான் கீழ் விழுவதற்கா
மனம்படைத்தான் அஞ்சி ஒழிவதற்கா

விண் படைத்தான் ஒளி வருவதற்கா
வீசுந் தென்றல்உயிர் தருவதற்கா
கண்கள் மின்னும் பெரு இடியிடித்தே
கடும்புயலாய் எம்மை வருத்திடவா

பூக்கள் செய்தானதைப் பறித்திடவா
பூவித ழேன்கைகள் பிரித்திடவா
பூக்கள் வைத்தான்வண்டு குடித்திடவா
போதை கொண்டேமலர் வருத்திடவா

பாவை கொண்டாலெழில் பலிகொள்ளவா
பருவ உடல்தினம் வதைசெய்யவா
தேவை என்றாலின்பம் துய்த்திடவா
தேடியதும் அதைத் தீயிடவா

நாடு என்றால்அது நரகமதா
நரபலி தானவர் அறநெறியா
தேடு என்றால்ஒரு திரவியமா
தீதுசெய்தே வரும் பாவங்களா

அரசன் என்றால் அவன் அறிவுளனா
ஆளைக்கொல்லும் ஒரு எமன்மகனா
சிரசு கொய்தே அவன் சிரிப்பதற்கா
சேவை என்றாலுயிர் குடிப்பதுவா

இனமழித்தால் அது இறைமை என்றா
இரத்தம் பட்டே செம்மைஅடைந்திடுமா
தினம்படுபொய் சொல்லத் திறமைஎன்றா
திருகு தாளம் சன நாயகமா

உலகமென்றால் அது உழலுவதா
உயிர்கள் என்றால்ஆடும் ஊஞ்சல்களா
கலகமென்றால் பெருங்காவியமா
கண்களில் நீரிடல் அரசாங்கமா

வெட்டுகிறான் எமை விரட்டுகிறான்
வேடிக்கை பார்ப்பது விரிஉலகா
கட்டுகிறான் கடல் மீதெறிந்தான்
கையறு நிலையாய் கவினுலகா

எத்துணைநீசரை எதிர்த்து நின்றோம்
எடுத்தடி வைத்தவர் திகைக்க வைத்தோம்
நித்திலம்மீதினில்நேர்மைவெல்ல
நெஞ்சினை முன்னே நிமிர்த்திவந்தோம்

பூக்களைக் கொய்தனர் இடியிடிக்க
புதுவிஷம் வைத்தனர் துடிதுடிக்க
தீக்களை வைத்தனர் தெருமுழுக்க
தீய்ந்தது ஈழம் தேம்பியழ

ஒருவனை எதிர்த்தது உலகமெல்லாம்
ஒருநிரைசேர்ந்தது உண்மை கொல்ல
பெருகி யதோ பேரவலமல்ல
பேய்களின் பிடியின் ஆழங்களே

இறந்தது ஈழ தமிழனல்ல
இயற்கையின் தர்மதிருவுளமே
எரிந்தது தீயில் ஊர்களல்ல
இறையவன் கோவில் வாசல்களே

english to tamil spoken english (ஆங்கில பாடப் பயிற்சிகள்)

ஆங்கில பாடப் பயிற்சிகள்


ஆங்கிலம் துணுக்குகள்


ஆங்கில நிறுத்தற்குறியீடுகள்



English Grammar Lessons

Tamil - English Dictionary


A to Z Tamil Movie

Free Tamil Movies
A-Z Tamil Movies Index
New Tamil Movies
Live Tamil DVD Movies
Tamil DVD Download
Tamil VCD Download
Tamil Video Songs
Milestone Movies
Tamil Mp3 Downloads
Tamil Movie Comedy
Tamil Dub English films
Vijay TV Lollusabha
Ramayan Serial
Kana Kannum Kalangal
Kalakapovathu Yaaru
Asathapovathu Yaaru
SunTV Super 10
Tamil Movie Clips
Tamil Movie Trailers
Tamil Mp3 Live Songs
Online Tamil TV-Live
Online Tamil Radio
Pop/Remix Songs
Kid's Zone
Disclaimer



# 0 - 9


A
  • Aatukara Alamelu
  • Arai En 305il Kadavul
  • Deivam
  • Devarajan
  • Kaalaippani
  • Kaathal Kottai
  • Kalvanin Kadhali
  • Kathirundha Kangal
  • Kettavaraellam Paadalam
  • Kumari Penn
  •  
  • Malarinum Melliya
  • Miss Chandramadhi
  • Muni
  •  
  •  
  • Nayagan
  • Pidichirukku
  • Pokkiri Raja
  • Pollathavan - Rajani
  • Priyamana Thozhi