மூக்குத்தி அணிவது ஏன்?
மூக்கு குத்துவது, காது குத்துவது துளையிடுவது எல்லாம் உடலில் உள்ள கெட்ட வாயுவை வெளியேற்றுவதற்கு தான், ஏன் இதை நம் முன்னோர்கள் செய்தார்கள் என்பதை ஆராய்ந்தால் பல இரகசியங்கள் விளங்கும்.  கைரேகை, ஜோசியம் பார்ப்பவர்கள் ஆண்களுக்கு வலது கையும் பெண்களுக்கு இடது கையும் பார்த்து பலன் கூறுவது வழக்கம். ஆண்களுக்கு வலப்புறமும் பெண்களுக்கு இடப்புறமும் பலமான, வலுவான பகுதிகளாகும்.
ஞானிகளும் ரிஷிகளும் தியானம் செய்யும் போது வலது காலை மடக்கி இடது தொடை மீது போட்டு தியா னம் செய்வார்கள். இதற்கு காரணம் இடது காலை மடக்கி தியானம் செய்யும் போது வலது பக்கமாக சுவாசம் போகும். வலது என்றால் தமிழில் வெற்றி என்று பொருள்.வலது பக்கமாக சுவாசம் செல்லும் போது தியானம், பிராத்தனை எல்லாம் கண்டிப்பாக பலன் தரும். அதனால் இந்த நாடியை அடக்குவதாக இருந்தால் வலது பக்க சுவாசத்திற்கு மாற்றவேண்டும். அதே மாதிரி ஒரு அமைப்புத்தான் மூக்குத்தி.
மூளையின் இயக்கம் 
நம் மூளையில் நமது மூளையில் ஹிப்போதலாமஸ் என்ற பகுதி இருக்கிறது, இப்பகுதி உடலில் இருக்கு பல்வேறு செயல்பாடுகளை இயங்க வைக்கவும், கட்டுப்படுத்தவும் முக்கியப் பங்கு வகிக்கின்றது. குறிப்பாக ஹார்மோன் வெளிப்பாடு, வெப்பநிலை கட்டுப்பாடு, பசி, தாகம், தூக்கம், காமம் என உடலில் இருக்கும் பிட்யூட்டரி சுரப்பி மற்றும் எல்லா சுரப்பிகளுக்கு மூலமே இந்த ஹிப்போதலாமஸ் தான். 
இடது புறத்தில் மூக்குத்தி அணியும் போது பெண்களின் வலது புற சுவாசம் பலமாகிறது.  இதனால் வலது பக்க மூலையின் செயல்பாடுகள் அதிகமாகி இந்த ஹிப்போதலாமஸ் சீராக இயக்க உதவுகிறது. மேலும் நம்முடைய அன்றாட செயல்பாடுகள் பெரும்பாலானவை வலது புற மூளை  இயக்கத்தையே அதிகம் பயன்படுத்துகின்றன. இதனால் வலது பக்க மூளை  செயல்பாடுகளை அதிகரிக்க இந்த சுவாச மாற்றம் பெண்களுக்கு உதவுகிறது.
மூக்குத்தி அணிவதால் ஏற்படும் நன்மைகள் 
இன்றைய நம்முடைய மனித வாழ்க்கைக்கு அதிகமாக இடது பக்க மூளையை அடைத்து வலது பக்கமாக வேலை செய்ய வைக்கிறோம். அதனால் வலது கை, வலது கால் எல்லாமே பலமாக உள்ளது. பெண்கள் மூக்குத்தி அணியும்போது, முன் நெற்றிப் பகுதியில் இருந்து ஆலம் விழுதுகள் போல் சில நரம்புகள் நாசி துவாரத்தில் இறங்கி கீழே வரும். இப்படி விழுதுகள் மூக்குப் பகுதியில் ஜவ்வு போல மெல்லிய துவாரங்களாக இருக்கும். மூக்குப் பகுதியில் ஒரு துவாரத்தை ஏற்படுத்தி அந்த துவாரத்தில் மூக்குத்தி அணிவதால், நரம்பு மண்டலத்தில் உள்ள கெட்ட வாயு அகலும்.
சிறுமிகளுக்கு மூக்குத்தி அணிவிப்பது கிடையாது. பருவப் பெண்களுக்கே மூக்குத்தி அணிவிக்கப்படுகிறது. பருவ வயதை அடைந்த பெண்களுக்கு கபாலப் பகுதியில் அதாவது, தலைப்பகுதியில் சில கெட்ட வாயுக்கள் இருக்கும். இந்த வாயுக்களை வெளிக் கொண்ருவதற்கு ஏற்படுத்தபட்டதுதான் இந்த மூக்கு குத்துவது. மூக்கு குத்துவதால் பெண்களுக்கு ஏற்படக் கூடிய சளி, ஒற்றைத் தலைவலி, மூக்கு சம்பந்தமான தொந்தரவுகள், பார்வைக் கோளாறு சரி செய்யப்படுகின்றன்.
சிந்தனா சக்தியை ஒரு நிலைப்படுத்துகிறது. மனதை அமைதிப்படுத்துகிறது. தியானம், பிராத்தனையில் ஈடுபட உதவுகிறது. நரம்பு சம்பந்தமான நோய்கள், மனத்தடுமாற்றம் ஏற்படாமல் இருக்க மூக்குத்தி உதவுகிறது என்று ஞானிகளும் ரிஷிகளும் கூறியிருக்கின்றனர்.
தங்கம் அணிவதால் 
உடலிலுள்ள வெப்பத்தைக் கிரகித்து நீண்ட நேரம் தன்னுள்ளே வைத்திருக்கூடிய ஆற்றல் தங்கத்துக்கு இருக்கிறது. தங்க நகைகளைப் பெண்கள் அணிவதன் மூலம் உடலில் ஏற்படும் அதிக வெப்பம் தடைப்பட்டு போகும், பெண்களின் உடல் வெப்பம் சம நிலையடைகிறது.  பெரும்பாலும் மூக்குத்தியை தங்கத்தில் அணிவதையே பெண்கள் விரும்புவர்கள்.
இன்றைய நாகரிகம் 
இன்றைக்கு நாகரிகம் வளர்ந்து விட்ட தால் சில பெண்கள் வலதுப் பக்கம் மூக்குத்தி அணிகிறார்கள். ஆனால், சாஸ்திர ரீதியாக இடப் பக்கம்தான் பெண்கள் மூக்குத்தி அணியவேண்டும். இப்போது மூக்குத்தி குத்துவது நாகரிகம் ஆகிவருகிறது. ஆண்கள் கூட மூக்குத்தி, காது குத்துவது நாகரிகமாக செய்து வருகிறார்கள். ஆதிகாலத்தில் பெண்களும் ஆண்களும் மூக்குத்தி, காது குத்துவது வழக்கமாக இருந்தது.