Mandras – மந்திரம்

நம்மில் அனைவருக்கும் ஏதாவது ஒரு வகையில் நம்பிக்கை இருக்கும்.  அப்படி நாம் நம்பும் ஒரு விஷயம் மந்திரம், மாயவித்தை ஆகும்.  அதன் சில அடிப்படைகளை பார்போம் :
அஸ்டகர்மம் 
எட்டு வித கர்மங்ககளை (செயல்களை) குறிக்கும், அதாவது மாந்திரீக சக்தி மூலம் நாம் எட்டு விதமான அஷ்டமசித்துகளை பெறலாம் என்று கூறப்படுகிறது, அவை
  1. வசியம்
  2. மோகனம்
  3. ஆகர்சணம்
  4. தம்பனம்
  5. பேதனம்
  6. வித்வேசணம்
  7. உச்சாடனம்
  8. மாரணம்
என்ற எட்டு வித (அஸ்டகர்மம்.) செயல்களையும் செய்யலாம்.
மந்திரங்கள்
வசியம் – ஓம் யநமசிவ அரிஓம் ஐயும் கிலியும் சுவாகா.
இது மற்றவர்களைத் தன் வசப்படுத்தல்.
மோகனம் – ஓம் மசிவயந கிலியும் சவ்வும் ஸ்ரீயும் சுவாகா.
இது பிறரை தன்மீது மோகம் கொள்ளச் செய்தல்.
தம்பனம் – ஓம் நமசிவய ஐயும் கிலியும் சவ்வும் சுவாகா.
இது எந்தவொரு இயக்கத்தையும் அப்படியே ஸ்தம்பிக்கச் செய்வது.
உச்சாடனம் – ஓம் வயநமசி ஸ்ரீயும் அரிஓம் ஐயும் சுவாகா.
இது தீய சக்திகள் அனைத்தையும் தன் இடம் விட்டு விரட்டுவதாகும்.
ஆக்ருசணம் – ஓம் வசிமநய ஸ்ரீயும் சவ்வும் கிலியும் சுவாகா.
இது துர் தேவதைகளை தன்முன் பணிய வைப்பது.
பேதனம் – ஓம் யவசிமந அரிஓம் ஸ்ரீயும் சவ்வும் சுவாகா.
இது சுயநினைவற்றுப் பேதலித்துப் போகச் செய்வது.
வித்துவேடணம் – ஓம் நமசிவய ஐயும் கிலியும் ஸ்ரீயும் சுவாகா.
இது ஒருவருக்கொருவர் பகையை உண்டாக்கிப் பிரிப்பது.
மாரணம் – ஓம் சிவயநம சவ்வும் ஸ்ரீயும் அரிஓம் சுவாகா.
இது உயிர்கள் அனைத்திற்கும் கேடு விளைவிப்பது.
மாந்திரீகத்தின் அட்டமா சித்திகளை பெற விரும்புபவர்கள், மேற்கூறிய மந்திரங்களை இலட்சம் முறை மனதில் உருஏற்றிக்கொள்ள வேண்டும், இந்த மந்திரத்தை உச்சாடனம் பண்ணும் போது அமரும் ஆசனம் எந்த மரத்தில் செய்த  பலகையில் அமர்ந்தால் சிறப்பானதாக இருக்கும் என்று புலிப்பாணிச்சித்தர் பின் வருமாறு குறிப்பிடுகிறார்.
  • பலா பலகை – தம்பனம்
  • மாம் பலகை – மோகம்
  • வில்வம் – வசியம்
  • பேய்த்தேத்தான் – பேதனம்
  • எட்டிப்பலகை – வித்துவேடணம்
  • அத்திப்பலகை – மாரணம்
  • வெண்நாவல் – ஆக்ருசணம்
  • வெப்பாலை – உச்சாடனம்.
இதே வகையில் மாந்திரீகத்தின் அஸ்டமா சித்திகளையும் பெற விரும்புபவர்கள் அவற்றை செய்யும் போது பூஜைக்கு பயன் படுத்த வேண்டிய மலர்களைப் பற்றி புலிப்பாணிச்சித்தர் பின் வருமாறு வகைப்படுத்துகிறார்.
  • மல்லிகை – வசியம்
  • முல்லை – மோகனம்
  • தும்பை – உச்சாடனம்
  • அரளி – ஆக்ருசணம்
  • காக்கனமலர் – வித்துவேடணம்
  • ஊமத்தம் – பேதனம்
  • கடலைமலர் – மாரணம்
  • தாமரை – தம்பனம்
இறுதியாக மாந்திரீக பயிற்சியின் போது அதனை செய்பவர்கள் மூலங்களை (உடலை) அலங்கரிக்க வேண்டிய ஆடை வகைகளைப் பற்றி இவ்வாறு குறிப்பிடுகிறார் புலிப்பாணிச்சித்தர்.
  • செம்பட்டு – வசியம்
  • மஞ்சள் பட்டு – மோகனம்
  • பச்சைப்பட்டு – தம்பனம்
  • வெள்ளைப் பட்டு – பேதனம்
  • கழுதைவண்ணப்பட்டு – வித்துவேடணம்
  • பஞ்சவர்ணபட்டு – உச்சாடனம்
  • ஆந்தைவண்ணப்பட்டு – ஆக்ருசணம்
  • கருப்பு வண்ணப்பட்டு – மாரணம்.

இந்த பயிற்சிகளை மேற்கொள்ளும் போது அமர வேண்டிய திசை, உடலில் அணிய வேண்டிய மாலைகள், செபிப்பதற்கு பயன்படுத்த வேண்டிய மாலைகள் பற்றியும் காண்போம்.
  • கிழக்கு – இந்திரன் – தம்பனம்
  • தென்கிழக்கு – அக்கினி – மோகனம்
  • தெற்கு – எமன் – மாரணம்
  • தென்மேற்கு – நிருதி – உச்சாடனம்
  • மேற்கு – வருணன் – ஆக்ருசணம்
  • வடமேற்கு – வாயுதேவன் – வித்வேடணம்
  • வடக்கு – குபேரன் – பேதனம்
  • வடகிழக்கு – ஈசன் – வசியம்
இதைப் போலவே மாந்திரீகத்தின் அஸ்டமா சித்திகளையும் பெற விரும்புபவர்கள் அவற்றை செய்யும்போது அணிய வேண்டிய மாலைகளையே ஜெபம் செய்யும் போது பயப்படுத்த வேண்டும்.  மாந்திரிக நிலைகளுக்கு ஏற்ப இவை மாறுபடும் என்றும் அது பற்றிய தகவல்களை புலிபாணி சித்தர் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.
  • உருத்திராட்சம் – வசியமாகும்
  • மிளகுமணி – மோகனந்தான்
  • துளசிமணி – உச்சாடனம்
  • தாமரைமணி – தம்பனம்
  • நாகமணி – மாரணம்
  • சங்குமணி – ஆக்ருசணம்
  • எட்டிமணி – வித்துவேடணம்
  • வெண்முத்து – பேதனம்
இந்த மந்திரங்களை குறிப்பிட்ட நாளில்தான் உச்சாடனம் செய்திட துவங்க வேண்டுமாம். இதைப் பற்றி புலிப்பாணி சித்தர் பின்வருமாறு கூறுகிறார்.
  • ஞாயிறு – வசியம் மற்றும் பேதனம்
  • திங்கள் – தம்பனம்
  • செவ்வாய் – மோகனம்
  • புதன் – மாரணம்
  • வியாழன் – உச்சாடனம்
  • வெள்ளி – ஆக்ருசணம்
  • சனி – வித்துவேடணம்
மந்திர உச்சாடணம் செய்வதற்க முன்னர் வினாயகரை முறைப்படி வழிபாடு செய்து எந்த தடங்களும் இல்லாமல் எடுத்த செயல் வெற்றிகரமாக முடிய அருள் புரிய வேண்டும் என்று வேண்டிக் கொண்டு பின்னர் தான் மந்திர உச்சாடண வழிபாட்டினை ஆரம்பிக்க வேண்டும்.
மேல கூறப்பட்டதில் நல்ல விஷயங்களை மட்டும் பயன்படுத்தும் படி கேட்டுக்கொள்கிறேன். நன்றி
ஓம் நமசிவய 

No comments: