செவ்வாய்க்கிழமை முடி வெட்டவோ, ஷேவிங்கோ, நகம் வெட்டவோ செய்தல் வீட்டில் உள்ள பாட்டி அல்லது அம்மா,  இந்நாளில் செய்வது நல்லதல்ல என்றும் சொல்வார்கள். ஆனால் நாம்  அது வெறும் மூட நம்பிக்கை என்று என்று கூறி, அவர்களை மதிக்காமல் அந்த காரியங்களை செய்வோம். இருப்பினும், பழங்காலம் முதலாக பின்பற்றப்பட்டு வரும் இப்பழக்கத்திற்கு பின்னால் உள்ள காரணத்தை பார்ப்போம்.  
செவ்வாய்க்கிழமை துர்க்கை மற்றும் லட்சுமி தினம்
இந்தியாவின் பல பகுதிகளில் செவ்வாய்க்கிழமை புனித நாளாகக் கருதப்படுகிறது. ஏனெனில் செவ்வாய்க்கிழமையானது துர்க்கை அம்மன் மற்றும் லட்சுமிக்கு உரிய நாளாக கருதப்படுகிறது.
செலவு மற்றும் வீட்டை சுத்தம் செய்தல் கூடாது
செல்வத்தை வாரி வழங்கும் லட்சுமிக்கு உரிய நாள் செவ்வாய்க்கிழமை, இந்நாளில் லட்சுமி நம்மை தேடி வருவாள் என்பதால், இந்நாளில் நம்மிடம் உள்ள பணத்தை மற்றவருக்கு கொடுத்தால், லட்சுமி கடாட்சம் நம்மை விட்டு சென்றுவிடும் என்ற நம்பிக்கையை மக்கள் கொண்டுள்ளனர். இதனால் பலரும் இந்நாளில் பண வரவை எதிர்பார்ப்பதோடு, பணத்தை செலவிடமாட்டார்கள்.
இந்நாளில் வீட்டை தண்ணீர் ஊற்றி கழுவிடவோ அல்லது வீட்டில் உள்ள பொருட்களை தூக்கி எறியவோ மாட்டார்கள். இப்படி செய்வதால், வீட்டில் குடி கொண்டுள்ள லட்சுமி நம் வீட்டை விட்டு சென்று விடுவாள் என்ற நம்பிக்கை தான் முக்கிய காரணம்.
உடல் சுத்தம் கூடாது 
உடல் சுத்தம் என்றால் குளிக்கக்கூடாது என்று அர்த்தம் இல்லை, முடி வெட்டுதல்,   ஷேவிங் செய்தல்.  நகம் வெட்டுதல் போன்ற செயல்களைக் குறிக்கும்.  
ஜோதிடத்தின் படி
ஜோதிட சாஸ்திரம் இச்செயல்களை ஒருவர் மேற்கொண்டால், அவரது வாழ்நாளில் 8 மாதங்கள் குறைவதாக சொல்கிறது.  செவ்வாய்க்கிழமையில் செவ்வாய் பகவான் நம்மை ஆட்கொள்கிறாராம், மேலும் மனித உடலில், செவ்வாய் இரத்தத்தில் குடியிருக்கிறார். இரத்தத்தில் இருந்து தான் முடி வளர்கிறது. எனவே செவ்வாய் கிழமைகளில் முடியை வெட்டினால், இரத்தம் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு உள்ளாகக்கூடும்.
செவ்வாய் கிரகத்தின் எதிர்மறை விளைவுகள்
முடியின் நிறம் கருப்பு. நம் உடலின் முடியை சனி நிர்வகிக்கிறது. செவ்வாய் கிழமைகளில் செவ்வாய் நம்மை ஆளுகிறது, ஆனால் சனி பகவான் தான் செவ்வாயின் தாக்கத்தில் இருந்து நம்மை பாதுகாக்கிறது. அதனால் செவ்வாய்க்கிழமைகளில் முடியை வெட்டினால், சனி கிரகத்தின் சக்தி குறைந்து,  செவ்வாயின் எதிர்மறை விளைவுகளுக்கு உள்ளாகக்கூடும். எனவே தான் செவ்வாய் கிழமைகளில் மேற்கூறிய செயல்களை செய்ய வேண்டாம் என்று சொல்கிறார்கள்.
இதுப் பற்றி எந்த ஒரு ஆராய்ச்சியிலும் நிரூபிக்கப்படாவிட்டாலும், நம் முன்னோர்கள் அவர்களுக்கு கிடைத்த தகவலின் படி,  இதை நம்பி பின்பற்றி வந்தார்கள். நாமும் அறிவியல் பூர்வமாக சிந்தித்து இரத்தம் சம்பந்தப்பட்ட நோய் ஏற்படாமல் இருக்க பின்பற்றலாம் .
வாழ்க வளமுடன்