Mudras – முத்திரைகள்

உடல் நலம் தரும் விரல் முத்திரைகள்
முத்திரைகள் என்றால் கைவிரல்களைப் பயன்படுத்தியே செய்யப்படும் ஒரு பயிற்சி, அதாவது கை விரல்கள் ஒரு குறிப்பிட்ட நிலையில் வைப்பதன் மூலம் உங்களது உடலை ஒழுங்குபடுத்தும் ஒரு நுட்பமான அறிவியல். முத்திரைகள் இந்தியத் துணை கண்டத்தில் தோன்றியது.  பரத நாட்டிய சாஸ்திரத்தில் விரல் முத்திரைகள் மிக முக்கியமானவை. மகான்கள், மற்றும் தெய்வங்களின் சிலைகளையும், திருவுருவப் படங்களையும் கூர்ந்து பார்த்தால் அவர்களுடைய கைவிரல்கள் ஏதாவது ஒரு முத்திரை நிலையில் இருப்பதைக் காணலாம். துவக்கத்தில் இந்து மதத்திலும், புத்த மதத்திலும் அதிகமாகப் பயன்படுத்தப்பட்ட இந்த முத்திரைகள் காலம் செல்லச் செல்ல உலகின் பிற பகுதிகளுக்கும் பரவத் துவங்கின.
முத்திரைகள் உடல் நலத்திற்கும், மன நலத்திற்கும் பெரிதும் பயனளிப்பதாக இருக்கிறது,  யோகா மற்றும் தியானக் கலைகளில் பயன்படுத்தும் போது கிடைக்கும் பலன்கள் பலமடங்கு சக்தியுடன் இருப்பதாக பயன்படுத்தி பலன் கண்டவர்கள் கூறுகிறார்கள்.  சரி,  சில எளிய முத்திரைகளையும், அவற்றைச் செய்வதனால் ஏற்படும் பலன்களையும் சற்று பார்ப்போம்.
ஞான முத்திரை
Ganam
கையின் பெருவிரல் நுனியையும், ஆட்காட்டி விரலின் நுனியையும் இணைக்கையில் இந்த முத்திரை கிடைக்கிறது. மற்ற விரல்கள் நேராக நிறுத்தப்படவேண்டும். பெரும்பாலான தியான நிலைகளில் இந்த முத்திரை பயன்படுத்தப்படுகிறது.
பலன்கள் 
நினைவு சக்தியை அதிகரிக்கவும், கவனக்குறைவைக் குறைக்கவும், மன அமைதியை அதிகரிக்கவும் இந்த முத்திரையைப் பயன்படுத்தலாம்.   ஹிஸ்டீரியா, மன அழுத்தம் போன்றவற்றிலிருந்து பெருமளவு விடுபடலாம்.
வருண முத்திரை
Varun
பெருவிரல் நுனியையும் கடைசி விரல் நுனியையும் இணைக்கையில் வருண முத்திரை ஏற்படுகிறது. மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும்.
பலன்கள் 
உடலின் நீர் சமநிலை மாறுமானால் அதனால் ஏற்படும் தீய விளைவுகளை இந்த முத்திரை தடுக்கிறது என்று சொல்கிறார்கள். இரத்த சம்பந்தமான வியாதிகளைப் போக்கவும், தோல் சுருக்கத்தைப் போக்க உதவும்.
சூன்ய முத்திரை
Soonya
கையின் நடுவிரலை பெருவிரலின் அடியில் உள்ள மேட்டில் வைத்து அந்தவிரலைப் பெருவிரலால் லேசாக அழுத்தியபடி வைத்துக் கொள்ளும் போது சூன்யமுத்திரை ஏற்படுகிறது. மற்ற விரல்கள் நீட்டப்பட்ட நிலையிலேயே இருக்கவேண்டும்.
பலன்கள் 
இந்த முத்திரை முக்கியமாக காது வலியையும், மற்ற காது சம்பந்தமான குறைபாடுகளையும் போக்க உதவுகிறது.
ப்ராண முத்திரை
Prana_mudra
கையின் மோதிர விரலையும், கடைசி விரலையும் மடக்கி அந்த இரண்டுவிரல்களின் நுனியைப் பெரு விரல் நுனியால் தொடும் போது ப்ராண முத்திரை உருவாகிறது. மற்ற விரல்கள் நீட்டப்பட்டபடியே இருத்தல் வேண்டும்.
இந்த முத்திரை கண்பார்வைக் கோளாறையும், மற்ற கண் சம்பந்தமான வியாதிகளையும் குறைக்க உதவுகிறது. உடலில் நோய் எதிர்ப்பு சக்திக்கும், களைப்பை நீக்க பயன்படுகிறது.
அபான முத்திரை
Apana
கையில் நடு விரல் மற்றும் மோதிர விரலை மடக்கி அந்த இரண்டு விரல்களின் நுனியை பெரு விரல் நுனியால் தொடும் போது அபான முத்திரை ஏற்படுகிறது.
பலன்கள் 
இந்த முத்திரை சர்க்கரை வியாதியைக் கட்டுப்படுத்த உதவுகிறது. மூலம் மற்றும் மலச்சிக்கலைப் போக்க இந்த முத்திரை பெருமளவு உதவுகிறது.
அபான வாயு முத்திரை
Apan-vayu-mudra
நடுவிரல், மற்றும் மோதிர விரல் மடிக்கப்பட்டு அந்த விரல்களின் நுனியைப் பெருவிரல்நுனியால் தொட்டு, ஆட்காட்டி விரலை மடித்து பெருவிரலின் அடிப் பாகத்தில் வைக்கும் போது இந்த முத்திரை உருவாகிறது.
பலன்கள் 
இதய சம்பந்தமான குறைபாடுகளை நீக்கவும், இதயத்தை வலுப்படுத்தவும் இந்த அபான வாயு முத்திரை உதவுகிறது. அத்துடன் வாயுத் தொந்தரவுகளையும் இந்த முத்திரை வெகுவாகக் குறைக்கிறது.
லிங்க முத்திரை
Linga
படத்தில் காட்டியபடி விரல்களைப் பின்னி இடது பெருவிரலை நீட்டியநிலையில் விட்டு வலது பெருவிரலால் இடது பெருவிரலை சுற்றிப் பிடித்துக்கொள்ளும் போது லிங்க முத்திரை ஏற்படுகிறது.
பலன்கள் 
சளி, கபம் போன்ற கோளாறுகளை இந்த லிங்க முத்திரை வெகுவாகக் குறைக்கிறது.
முத்திரையை பயிற்சி செய்யும் முறை 
முதலில் நன்றாகக் கை மற்றும் கால்களை கழுவிக் கொள்ளுங்கள். ஒரு பாய் அல்லது விரிப்பு விரித்து அதன் மேல் அமர்ந்து  அல்லது  நின்று அல்லது  படுத்த நிலையில் ஏதாவது ஒரு முறையை உங்கள் வசதிக்கு தகுந்தபடி தேர்வு செய்து முத்திரையை செய்யவும். நம்மை சுற்றி  அமைதியான சுழல் இருப்பது மிக முக்கியம்.  பின் கைகளை நன்றாகத் துடைத்துக் கொண்டு கைகள் சூடாகும் வரை இரு கைகளையும் சேர்த்து தேய்த்துக் கொள்ளுங்கள்.
நடந்து கொண்டு செய்ய வேண்டாம். 
இந்த முத்திரைகளைச் செய்யும் கால அளவு என்று பார்த்தல்  அரை மணி முதல் முக்கால் மணி நேரம் வரை உங்களுக்குத் தேவையான முத்திரைகளைச் செய்யலாம். பத்து அல்லது பதினைந்து நிமிட காலங்களில் சிறிது இடைவெளி விட்டு மூன்று முறை கூடச் செய்யலாம். ஒரேயடியாக நீண்ட நேரத்திற்குச் செய்ய ஆரம்பிக்காமல் சுமார் ஐந்து நிமிட காலம் செய்வதில் இருந்து ஆரம்பிப்பது நல்லது. பின் சிறிது சிறிதாக நேரத்தைக் கூட்டிக் கொண்டு செல்லுங்கள். இந்த முத்திரைகளால் வியக்கத்தக்க பெரும்பலன்கள் கிடைக்கின்றன என்று சொல்லப்படுகிறது.
இந்த முத்திரைகள் பயிற்சி இன்றைய மருத்துவ சிகிச்சைக்கு இணை என்று சொல்லாம்.  நீரழிவு,  இரத்த அழுத்தம், இருதயம் சம்பந்தமான சிக்கிச்சை, காது நோய்கள், கண் குறைபாடு மற்றும் வாயு தொந்தரவு போன்ற நோய்களுக்கு சிக்கிச்சை எடுப்பவர்கள்  இந்த பயிற்சியை முயற்சித்து பாருங்கள் எதிர் விளைவுகள் இல்லை. செலவு மற்றும எந்த கஷ்டமும் இல்லாத இந்த முத்திரைகள் மூலம் சிறிது பலன் கிடைத்தாலும், மருந்துகளை நிறுத்திக் கொள்ளலாம்.
படித்த அனைவரும் நோயின்றி வாழ என் வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன்

No comments: